
அரச வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினரின் போக்குவரத்து பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் அடுத்த வாரம் முதல் சுகாதார துறை பாரிய வீழ்ச்சியினை சந்திக்கும் என அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தர்சன சிரிசேன தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தர்சன சிரிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நாடு தொடர்பில் சிந்தித்து ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தர்சன சிரிசேன தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்