இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தின் முதலாவது தொகை இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 40 ஆயிரம் மெட்ரிக் டொன் யூரியா உரம் அடங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கப்பல் இன்று காலை 11 மணிக்கு நாட்டை வந்தடையும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள எஞ்சிய 25 ஆயிரம் மெட்ரிக் டொன் உரம் இரண்டாவது கட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள மொத்த உரத் தொகையான 65 ஆயிரம் மெட்ரிக் டொன்னில் 30 ஆயிரம் மெட்ரிக் டொன் நெற் பயிர்ச் செய்கைக்காகவும் 20 ஆயிரம் மெட்ரிக் டொன் சோளப் பயிர்ச் செய்கைக்காகவும் வழங்கப்படவுள்ளது.
மேலும் எஞ்சிய தொகை உரம் தேயிலைப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்