அமைதி ஆர்ப்பாட்ட போர்வையில் வன்முறையை தூண்ட முயற்சி!பாதுகாப்பு செயலர் பகிரங்க அறிவிப்பு

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் சில சக்திகள் வன்முறையை தூண்ட முயல்கின்றன என்ற தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான தருணத்தில் அனைத்து பொதுமக்களையும் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், எப்போதும் தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன் உள்ள படையினருக்கு பொதுமக்கள் ஆதரவை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *