இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் சந்தித்திராத அவமானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.
அதன்படி, கோட்டா அரசை விரட்டியடிக்க கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து மக்கள் செல்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு செல்ல முடியாத நிலையில் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பல இடங்களில் ரயில் நிலையங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு கிடைக்கும் வாகனங்களின் கூரைகளில் உட்பட மக்கள் ஏறி பயணிக்கும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்ட பகுதியை நோக்கி செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து செல்வதற்கு வாகனங்கள் இல்லாமையினால் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.




பிற செய்திகள்