பிரபல சிங்கள ஊடகத்தின் வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்குழு, தற்போது பிரபல சிங்கள தொலைக்காட்சி ஊடாக தமது வெற்றி குறித்து நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள், பிரபல சிங்கள ஊடகத்தின் வளாகத்திற்குள் நுழைந்து, அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த ஊடக நிறுவனம், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டி உள்ளது.

இதை தொடர்ந்து, குறித்த ஊடக தொலைக்காட்சியின் ஊடாக தமது கருத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் கோரியுள்ளனர்.

அதன்படி குறித்த நிர்வாகம் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *