ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்றையதினம் பல்வேறு அமைப்புக்கள் ஒண்றினைந்து நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் தீவிரத் தன்மையை அடுத்து ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு அரசியலில் தொடர் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
இதேவேளை இன்றைய மக்கள் எழுச்சி தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
2020 நாடாளுமன்றத் தேர்தலின் ஆணை மே 9, 2022 அன்று முடிவடைந்தது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் ஆணை இன்று ஜூலை 9 அன்று முடிவடைந்தது.
அடியோஸ், சார்! என அப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்