
கொழும்பு,ஜுலை 9
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் தற்போது இரவு உணவை தயாரிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு காணப்பட்ட வசதியான இருக்கைகளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.
சிலர் ஜனாதிபதி மாளிகையின்கூரையில் ஏறி தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பளித்து வந்தவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.