
ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டுமென கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எந்தவொரு போராட்டக்காரரும் இப்போதைக்கு வௌியேறப் போவதில்லை என அறியமுடிகிறது.
ஜனாதிபதி பதவி துறப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் வரை போராட்டக்களத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், பெரும்பாலான போராட்டக்காரர்கள் பசியில் வாடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பொருட்டு, போராட்டக்களத்திலுள்ள மக்களுக்கு முடியுமான உதவிகளை செய்து உதவுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்