ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: ரணில் கவலை

கொழும்பு,ஜுலை 9

கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரமே முதன்மையானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறை செயற்பாடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கட்டுப்பாடாக நடந்து கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *