மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்- அங்கஜன் கண்டனம்!

இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமது கண்டனத்தை பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

சிரச, சக்தி ஊடக வலையமைப்பை சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கிறேன்.மக்கள் எழுச்சி போராட்டங்களின்போது ஜனநாயக பணியில் ஈடுபடும் ஊடகத்துறையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.மிலேச்சத்தனமான இந்தச் செயலை தனிப்பட்ட ரீதியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *