இலங்கைக்கு ஆதரவளிக்குமா IMF? வெளியான அறிக்கை

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் நடைபெற்று வரும் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் போது தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து IMF இன் அறிக்கையில்,

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மக்கள் மீது குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.

மேலும் இந்த கடினமான நேரத்தில் IMF இன் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று IMF தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள தனது சகாக்களுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடரும் என IMF மேலும் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *