
கொழும்பு,ஜுலை 10
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீவைக்கப்பட்ட போது இல்லம் அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்றும், அந்த தருணத்தில் எவ்வாறு மன்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.