அடுத்த பிரதமர் சஜித் பிரேமதாஸ? – எம்.பி. வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது, மாற்று பிரதமராக எதிர்கட்சி தலைவரே நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்கவுள்ளதாக ராஜித எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று இங்கு இல்லை. பிரதமரும் இல்லை. எனவே மாற்றுப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரே நாட்டின் ஜனநாயகத்தின்படி நியமிக்கப்பட வேண்டும்.

உலகின் எந்த நாட்டு தலைவர்கள், ஒரு சர்வதேச அமைப்பு தலைவர்கள் வந்தாலும், பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையுமே சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.

எனவே, எமது எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து, அவரது தலைமையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுவோம் என ராஜித சேனாரத்ன எம்.பி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *