சமஷ்டி அரசியல் அமைப்பை கொண்டுவந்தால் மாத்திரமே மக்கள் சந்தோசமாக வாழ முடியும்! – கஜேந்திரன் எம்.பி.

நாட்டிலே நல்லாட்சி ஏற்படுவதற்கும், மக்கள் ஆனந்தத்துடன் கூடி வாழ வேண்டும் என்றால் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசிய இறைமை அங்கிகரிக்கப்பட்டு சமஷ்டி அரசியல் அமைப்பினை கொண்டு வந்தால் மாத்திரமே சாத்தியமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செய்திகள் சேகரிக்கின்ற பணிகளில் ஈடுபடுகின்ற ஊடகவியலாளர்கள் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டத்தை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

ஊடகவியலார்களுக்கு எப்பொழுதும் பக்கபலாக இருப்போம். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நேர்மையான, ஊழற்ற மற்றும் இனவாதமற்ற ஒரு ஆட்சி மலர வேண்டுமாக இருந்தால் இலங்கையின் 74 ஆண்டு கால ஆட்சி முறையினை மாற்றி அமையுங்கள், ஒற்றை ஆட்சி முறையினை ஒழியுங்கள்.

தமிழர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்ற தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பினை அமைப்பதற்கு முன்வரவேண்டும், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் சமத்துவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகைகளை புறக்கணித்து இனி உருவாக்கப்படும் ஆட்சியை அமைத்தால் இதற்கு எதிராக மீண்டும் ஒரு நாள் இதே சிங்கள மக்களால் ஜனாதிபதி, பிரதமர் மாளிகைக்குள் நுழைகின்ற நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டிலே நல்லாட்சி, மக்கள் ஆனந்தத்துடன் கூடி வாழ வேண்டும் என்றால் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசிய இறைமை அங்கிகரிக்கப்பட்டு சமஷ்டி அரசியல் அமைப்பினை கொண்டு வந்தால் மாத்திரமே சாத்தியமாகும்

தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரை, உரிமைகள் எட்டப்படும் வரை எங்களது போராட்டங்கள் ஒருபோதும் ஓயப்போவதில்லை.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *