ராமநாதபுரத்தில் 450 கிலோ கடல் அட்டை பறிமுதல் – இருவர் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 450 கிலோ கடல் அட்டையுடன், சந்தேக நபர்கள் வனத்துறை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதியம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருமேனி பகுதியில் இருந்து ஆட்டோவில் கடல் அட்டை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.

இதன் போது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *