ஜனாதிபதி கோட்டா பதுங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை மேற்கோள் காட்டி இந்திய செய்திச்சேவை ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், தாம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலை மோசமடைந்ததையடுத்து, தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பலரும் தற்போது தமது பதவி விலகலை அறிவித்து வருகின்றனர்.

இதே வேளை ஜனாதிபதி கோட்டா இராணுவத் தலைமையகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *