எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 ஆயிரத்து 700 மெட்ரிக் தொன் எரிவாயு இவ்வாறு வந்திறங்கியுள்ளது. .
எதிர்வரும் 11 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மேலும் 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.