யாழில் தவறான முடிவெடுத்து சிறுவன் உயிர்மாய்ப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதிப் பகுதியில் சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கிரகப்பிரவேசம் இடம்பெறாத கட்டிய வீட்டினுள் தூக்கிட்டு குறித்த சிறுவன் உயிர்மாய்த்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்று வந்த சிறீரங்கன் பிரதீபன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

உடலம் மானிப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *