காலி முகத்திடல் நோக்கி அதிகளவிலான படையினர் குவிப்பு- பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்ட காரர்களால் ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஏராளமான ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் திடீரென குவிக்கப்பட்டு வருவதாகவும் மீண்டும் ஒரு குழப்பகரமான நிலை தோன்றவுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குறித்த செய்தியை மறுத்து பாதுகாப்பு அமைச்சு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காலி முகத்திடல் நோக்கி அதிகளவிலான படையினர்கள் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *