இடைக்கால…

இடைக்கால அரசில் த. தே. கூட்டமைப்புக்கு பிரதமர் பதவி – மனோ – அனுரவின் விருப்பம்!
-கேதீஸ்-
அமைய இருக்கும் இடைக்கால அரசில் தற்காலிக பிரதமராக த. தே. கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என மனோ கணேசன் எம். பி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடைக்கால அரசு ஒன்று அமையும் போது ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நியமிக்கப்படுபவர்கள் எதிர்காலத்தில் இதை சாதகமாக பயன்படுத்தி இந்தப் பதவிகளுக்காக தென் இலங்கையில் போட்டி போட்டு முட்டி மோதாதவர்களாக இருப்பது நன்று. அந்த வகையில் தற்காலிகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் என்கின்ற விடயத்தை JVP நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவும் நானும் சந்தித்த போது ஆலோசித்திருந்தோம் இதில் எனக்கும் உடன்பாடு உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *