எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் இன்று வருகை

3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (10) நாட்டை வந்தடைந்திருந்தது.

அத்துடன் இன்று 3,740 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் வருகை தரவுள்ளது.

அத்துடன் 3,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 12 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் வீடுகளுக்கான எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *