ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

<!–

ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு! – Athavan News

ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply