13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை – வாசு

பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க 13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 13ஆம் திகதிக்குப் பின்னர் அமுல்படுத்துவதற்கான தீர்மானங்களை இப்போதே எட்ட முடியும் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி பதவி விலகுவதற்கு வழிவகுத்ததால் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் போராட்டக்கார்களும் ஈடுபட வேண்டும் என அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *