உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ரொக்கெட் தாக்குதல்: 15பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ரொக்கெட்டுகள் தாக்கியதில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஐந்து மாடிக் கட்டடத்தின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. சாசிவ் யார் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது

டொனெட்ஸ்க் ஒரு ரஷ்ய உந்துதலின் மையமாக உள்ளது. ரஷ்யாவின் உராகன் ரொக்கெட்டுகளால் இந்த அழிவு ஏற்பட்டதாக அப்பகுதியின் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குடியிருப்புத் தொகுதி மீதான தாக்குதல்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *