பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் இணையவுள்ளதாக சிங்கள் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் கப்பல்கள் மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.