அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
அனைத்து அமைச்சர்களும் இணைந்து சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.