
மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் தொடராக எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை பலத்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி சர்வகட்சித் தலைவர்களின் சந்திப்பின் தொடராக அவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என்று தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதியின் எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் சபாநாயகர் ஊடாகவே வெளியிடப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி செயலகம் மறைமுகமாக மறுத்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
குறித்த அறிக்கையின் ஊடாக ஜனாதிபதி பதவி விலகப்போவதில்லையா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இதனிடையே, பிந்திய தகவல்களின்படி சர்வகட்சி அமைச்சரவை அமைக்கப்படுமாக இருந்தால் அப்போது பதவி விலகுவதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்