மன்னாரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!

ஜனாதிபதியை பதவி விலக கோரி நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. இவ் போராட்டத்தை பொறுத்தமட்டில் மன்னாரில் வழமையான நிலைமை காணப்பட்டபோதும் வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை.

இப் போராட்ட நாளில் சில மாவட்டங்கள் முடங்கி காணப்பட்டபோதும் மன்னாரில் வழமையான செயல்பாடுகள் இடம்பெற்றன.

ஆனால் பிரயாணிகளின் போக்குவரத்து மிக குறைவாக காணப்பட்டதுடன் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை போக்குவரத்து சேவைகள் உள்ளூர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் வெளி மாவட்ட சேவைகள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *