இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் கடற்கரையில் அமைந்துள்ள வாடிக்கு இனந்தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
மேலும் தொழிலாளர்கள் குறித்த பகுதிக்கு வருவதற்கு முன்னர் குறித்த வாடியானது எரிந்து சாம்பலாகியுள்ளது என தெரியவருகின்றது.
எனினும் இதுதொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


