<!–
யாழ்ப்பாணம்- மாதகல், குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு எரித்து நாசமாக்கியுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


