ஒழுங்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை பருப்பு இல்லாத ஹோட்டல் போலவே நான் பார்க்கின்றேன் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கொரோனாத் தொற்று நாட்டிலிருந்து ஒழித்த பிறகு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நிச்சயமாக நடத்தும்.
மாகாண சபை முறை தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். இப்போது ஒரு சில மாகாண சபை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபை செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


