
எம்பிலிபிட்டிய, ஜுலை 12
சட்ட விரோத முறையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 38 கிலோகிராம் ஹெரொயின் போதைப்பொருள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்துசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.