தென்னைமரத்தில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்-பசி தான் காரணமா?

களுத்துறையைச் சேர்ந்த நிமல் என்பவர், பசியைத் தாங்க முடியவில்லை என்று கூறி இன்று உயரமான தென்னைமரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

எனினும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மரத்திலிருந்து இறங்குமாறும் தெரிவித்தனர்.

மேலும் அவர் மரத்திலிருந்து இறங்கியதும் பொருட்கள் அடங்கிய பொதிகளை அந்த நபரிடம் கொடுத்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்தனர் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு மரத்தில் இருந்து கீழே இறங்கிய நபர், மற்ற அனைவரிடமும் சாமான்கள் இருந்தபோதிலும், தனக்கு எந்த சாமானும் கிடைக்கவில்லை என்றும் அவர் மரத்தில் இருந்து குதிக்க நினைத்து மரத்தில் ஏறியதாகவும் கூறினார்.

0000000000

Leave a Reply