நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் இருக்கும் போதே ஜனாதிபதி பதவி விலகினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதனை தவிர்க்க தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்