பேருந்து குடைசாய்ந்து விபத்து! இருவர் பலி!

புஸல்லாவை பகுதியில் நேற்று முற்பகல் அதிகளவான பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மண்திட்டியில் சாய்ந்ததினால் மிதி பலகையில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் பேருந்தைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸார் பேருந்து சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *