இங்கிலாந்தின் வடக்கு கிழக்கு முழுவதும் குழந்தை வறுமை அதிகரிப்பு!

தொற்றுநோயின் முதல் ஆண்டில் இங்கிலாந்தின் வடக்கு கிழக்கு முழுவதும் வறுமையில் வாழும் குழந்தைகளின் நிலை அதிகரித்துள்ளது.

இது பல பகுதிகளில் வீழ்ச்சியடைந்த போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் உச்சத்தை தொட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

லாஃப்பரோ பல்கலைக்கழகம் குழந்தை வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி, பிரித்தானியா முழுவதும் ஏழு ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

இருப்பினும், வடக்கு கிழக்கு முழுவதும் 12 சதவீத புள்ளிகள் அதிகரித்து 38 சதவீதமாக உள்ளது.
இது யார்க்ஷயர் மற்றும் ஹம்பரில் ஆறு சதவீத புள்ளிகளாலும், வேல்ஸில் ஐந்து புள்ளிகளாலும் உயர்ந்தது.

உள்ளூர்ப் பகுதிகளில் சராசரி வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களில் வாழும் குழந்தைகளின் சதவீதத்தைக் காட்டும் வேலை மற்றும் ஓய்வூதியத் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

2019-20 மற்றும் 2020-21ஆண்டுகளுக்கு இடையில் இது 31 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *