பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறினார்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் இராணுவ விமானம் ஒன்றின் மூலம் மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *