நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று புதன்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது.

73 வயதான ஜனாதிபதி, உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணியளவில் (22:00 GMT) மாலைதீவின் தலைநகரான மாலேயை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி முன்னதாக ஜூலை 13 புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்த நிலையில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்அவர் சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை வழங்கும்போது அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் சுங்கச் சட்டங்கள் பின்பற்றப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *