
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் வெளிநாடு செல்வதற்கு இந்தியா வசதி செய்ததாக வெளியான ஆதாரமற்ற மற்றும் ஊடகச் செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாலை 1.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்