
அரசாங்கம் அற்ற நாடக காணப்படும் இலங்கையில்,நிலைமை இன்னமும் மோசமடையும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதையை நிலவரம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜானதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை.அவர் அவ்வாறு விலகினால் தற்காலிகமாக பிரதமர், ஜனாதிபதியாக செயற்படுவார்.ஆனாலும் இது தொடர்பில் நாடாளுமன்றில் பேசப்பட வேண்டும்.இந்த நிலையில் ரணிலுக்கு ,மொட்டுக் கட்சியினர் ஆதரவு வழங்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
ராஜபக்சாக்களை காப்பாற்ற ,ரணிலின் உதவி தேவை என மொட்டு கட்சி அறிவார்கள்.அதிகாலை 3 மணிக்கு கோட்டா தப்பிச் செல்வதற்கு ரணில் உதவி புரிந்தார் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது.ஆகவே மொட்டுக்கட்சிக்கு ரணில் தேவை.
மக்கள் போராட்டம் காரணமாக ,யாப்புக்கு வெளியே பல செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன.இதனால் அரசு மக்கள் ஆணையை இழந்துள்ளது,அதே போன்று நாடாளுமன்றமும் மக்கள் ஆணையை இழந்துள்ளது.இவ்வாறு மக்கள் ஆணையை இழந்துள்ள நாடாளுமன்றமும் இப்போது செயற்படுகிறது,என்பது தான் பிரச்சினை.ஆகவே ஒரு புதிய தேர்தலுக்கு போக வேண்டும்.அதற்கும் 4 மாதங்கள் தேவை என சொல்லப்படுகிறது.
ஆகவே இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுள்ளது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.ஆகவே அரசு அற்ற நாடாக இலங்கை காணப்படுகிறது.
இந்த நிலமை நாட்டின் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்.உணவு எரிபொருள்,எரிவாயு நெருக்கடி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.
பிறசெய்திகள்