தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் சார்பாக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என ஆறு திருமுருகன் கோரிக்கை

போராட்டத்தினை வழி நடத்துகின்ற தென்னிலங்கை இளைய சமுதாயத்துடன் , தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்ற அனைத்து தமிழ் தரப்பினர்களும் இந்த சூழ்நிலையில் முழு தமிழர்கள் சார்பாகவும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என இலங்கையின் பொது மகன் என்ற வகையில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்திருந்தார் .

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இலங்கை வரலாற்றில் என்றும் காணாத திருப்பத்தை இன்று நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இலங்கையினுடைய தலைமைத்துவம் மற்றும் ஆடசியில் இருக்கின்றவர்கள் செய்த தவறுகளை பொது மக்களே திரண்டு மக்கள் புரடசி ஒன்று ஏற்பட்டு பல்வேறு மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் பிரதிநிதிகள் காலத்திற்கு காலம் பிரிந்து நின்று எதையும் சாதிக்கவில்லை என்பதனை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும் . எனவே இந்த சமயத்தில் போராட்டத்தினை வழி நடத்துகின்ற தென்னிலங்கை இளைய சமுதாயத்துடன் , தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்ற அனைத்து தரப்பினர்களும் இந்த சூழ்நிலையில் முழு தமிழர்கள் சார்பாக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகும் .

இதனை இதுவரை சிந்திக்காமல் இருப்பது அவர்கள் செய்கின்ற தவறாகும். மக்கள் எவ்வாறு அராசாங்கத்தினை வெறுத்துக்கொண்டு இருக்கிறார்களோ அதனைப்போன்று தமிழ் மக்களுக்கும் தமிழ் பிரதிநிகளின் மீது வெறுப்பு உள்ளது ,இதனை இல்லை என்று மறுக்க முடியாது .இதனை தமிழ் பிரதிநிதிகள் ஒவ்வருவரும் உணர வேண்டும் . தமிழ் பிரதிநிதிகள் ,அவர்களுக்குள்ளேயே மோதுவத்திலலேயே தங்களது நேரத்தினை செலவு செய்கிறார்களே தவிர தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கான சுபிட்ஷத்துக்கு வழி தேடுவதாக இல்லை .

எனவே இந்த காலகடடத்திலே நாங்கள் இந்த புதிய அரசு அமைக்கின்ற பொழுது ,எவ்வாறு பேரம் பேச வேண்டும் ?எவ்வாறான நிபந்தனைகளை ஒன்றாக ஒருமித்த குரலாக கொடுக்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் சிந்திக்க தவருவீர்களே அனால் ஒரு பெரிய வரலாற்று தவறினை செய்பவர்களாக எக்காலமும் இந்த சமுதாயம் கருதும் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *