இலங்கையில் நாளுக்கு நாள் போராட்டங்களும், வன்முறைகளும் அதிகரித்துள்ளதோடு, தெற்கு அரசியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ஒன்பதாம் திகதி தொடக்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் மட்டுமன்றி, நாட்டுக்கு வௌியிலும் சுற்றித் திரிந்துள்ளார்.
இதை தொடர்ந்து , அவருக்கு உணவு மற்றும் ஏனைய வசதிகள் ஒழுங்காக கிடைக்கவில்லை என அறியமுடிகிறது.
இந்நிலையில், நேற்று இலங்கையை விட்டு வௌியேற காத்திருந்த கோட்டாபய, பசி தாங்க முடியாத நிலையில் வெஜிடபிள் பிரியாணி கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதன்படி, நீர்கொழும்பின் முஸ்லிம் அரசியல்வாதியொருவர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட வெஜிடபிள் பிரியாணி தான் இலங்கையில் கோட்டாவின் கடைசி ஆகாரம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.