கோட்டாபய பதவி விலகுவார்: சபாநாயகர் உறுதி

கொழும்பு, ஜூலை 13:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் இன்றைய நாளுக்குள் தமக்கு கிடைக்கும் என்று சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ, தம்மிடம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஊடக சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் அறிவித்தப்படி, இன்று பதவியிலிருந்து தாம் விலகுவதில் எந்த மாற்றங்களும் இல்லையென்றும் கோட்டாபய ராஜபக்ஷ, தமக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதால், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளாரென, சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *