பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோள்

அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப் படைகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *