‘ரூபவாஹினி மீது நாங்கள் கல்லெறியவில்லை’ என கோட்டாகோகம போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபவாஹினி அதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் இரண்டு எதிர்ப்பாளர்களை அறிமுகப்படுத்தும் படங்களை ஒளிபரப்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு குறித்த சேனல் இடைநிறுத்தப்பட்டது.
எனினும், போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கையின் அரச ஒலிபரப்பான ரூபவாஹினி மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில், SLRC அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தேசிய தொலைக்காட்சியான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்ததாக கோட்டாகோகம பிரச்சாரத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் தங்கள் கருத்துக்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரியதாகவும், அதற்காக 15 நிமிட திரை நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் நடந்து கொண்டனர்.
அத்துடன், வன்முறையில் ஈடுபடாமல் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
மேலும், வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் குழு ஒன்று, ‘அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள்’ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கோரினர்.
எனினும், போராட்டக்காரர்களின் பக்கத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்க சுமார் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகே எமது சேனல் ஒளிபரப்பை நிறுத்தியது.
எவ்வாறாயினும், தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு SLRC தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது – என்றனர்.
இதேவேளை, போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
‘ரூபவாஹினி மீது நாங்கள் கல்லெறியவில்லை’ என்று போராட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் பக்கம் நிற்காமல், மக்களுடன் இணைந்து எங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுக்கு உதவிய ரூபவாஹினி ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளனர்.
பிறசெய்திகள்