கொழும்பில் பதற்றம் உச்சம் – பிரதமர் அலுவலகமும் போராட்டகாரர்களிடம் – சர்வ கட்சி கூட்டம் இடம் பெறுகிறது – இராணு தளபதியின் அறிவிப்பு – கோட்டாவுக்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!!

பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் பதற்றம் தொடர்கிறது : இராணு தளபதியும் முக்கிய அறிவிப்pu

கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகக் கோரி போராட்டம் வலுவடைந்துள்ளது.
புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை நாட்டில் அமைதியை பேணுவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம் பெற்று வருகின்றது

இன்று பதவி விலகுவதாக கூறி வெளிநாடு சென்றுள்ள கோட்டாபய ராஜபக்சேவுக்கு பதிலாக அரசியல் யாப்பின் பிரகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டப்பாய ராஜபக்ச மாலைதீவுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கும் அவருக்கு மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிங்கப்பூருக்கு பயணமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் பதற்றம் தொடர்கிறது : இராணு தளபதியும் முக்கிய அறிவிப்pu

கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகக் கோரி போராட்டம் வலுவடைந்துள்ளது.
புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை நாட்டில் அமைதியை பேணுவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம் பெற்று வருகின்றது

இன்று பதவி விலகுவதாக கூறி வெளிநாடு சென்றுள்ள கோட்டாபய ராஜபக்சேவுக்கு பதிலாக அரசியல் யாப்பின் பிரகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டப்பாய ராஜபக்ச மாலைதீவுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கும் அவருக்கு மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிங்கப்பூருக்கு பயணமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *