
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி உரிய நேரத்தில், அமைதியான மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவளிக்குமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு தீர்வுகாண்பது இன்றியமையாதது.
மேலும், சட்ட ஆட்சி, அதிகாரப் பகிர்வின் போது அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை உண்டு.
இந்த நடவடிக்கையின் போது தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதனை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிறசெய்திகள்