
கொழும்பு,ஜுலை 13
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமானால் நாளை (14) தொடருந்து சேவை இடம்பெறாது ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, இன்று பிற்பகல் வேளையில் ரயில் சேவையை மட்டுப்படுத்துவதற்கு ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் காரணமாக, ரயில் நிலையங்கள் சிலவற்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.