நாடாளுமன்ற பகுதியில் தற்போது மின்சாரம் தடைபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே பல முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பொலிஸார், தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்ததாக நாடாளுமன்ற கட்டிடம் ஆக்கிரமிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் பெருமளவான மக்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டத்தில் சிலருக்கு 1990 சுவசேரிய ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அவர்களுக்கு கண்ணீர்ப்புகை தாக்குதலின் அறிகுறிகள் இருந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.