‘யாழ்ராணி’ தொடருந்து நாளை சேவையில் ஈடுபடாது!

காங்கேசன்துறை – முறிகண்டி இடையே உள்ளூர் சேவையில் ஈடுபடும் யாழ். ராணி தொடருந்து நாளை வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் நாளைய தினம் தொடருந்து சேவைகளை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் காங்கேசன்துறை – முறிகண்டி இடையே உள்ளூர் சேவையில் ஈடுபடும் யாழ். ராணி தொடருந்து சேவையும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட யாழ்.ராணி தொடருந்து சேவையில் அதிகளவு பயணிகள் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *